சுடுகாடாக மாறி வரும் இத்தாலி.!. இத்தாலியின் இந்த நிலைக்கு என்ன காரணம்?
கடந்த டிசம்பர் மாதம் இடைப்பகுதியில் சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய உலகம் முழுவது பரவி வருகின்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துக் கொண்டிருக்கின்றன
குறிப்பாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உட்பட அமெரிக்கா போன்ற பல வல்லரசு நாடுகளில் தீவிரமடைந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு இந்த நிலைமை ஏன்? என்ற கேள்விக்கும் பலராலும் விடை காணாத ஒரு நிலையாகும். கடந்த ஜனவரி 29ஆம் திகதி சீனாவிலிருந்து இத்தாலி வந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து அடுத்த நாளே 6 மாத அவசர நிலையை இத்தாலி பிரதமர் அமுல்ப்படுத்தினார். அடுத்ததாக சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இத்தாலி தடை விதித்தாலும் அதன் எல்லைகளை மூடவில்லை. ஜனவரி மாத தொடக்கத்திலேயே கொரோனா தொற்று இத்தாலிக்குள் நுழைந்திருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்திருக்கலாம், சிலருக்கு அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா தொற்று என தெரியாமல் மருத்துவம் பார்த்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கூற்றை மெய்பிக்கும் விதமாக கடந்த சில மாதங்களில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இத்தாலியில் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அவர்களை தனிமைப்படுத்தாமல் விட்டால் சுமார் 22 பேருக்கு கொரோனா நோயை பரப்ப நேரிடும். இது மட்டுமின்றி அவசர நிலை, ஊரடங்கு என உத்தரவ பிறப்பிக்கப்பட்டாலும் வணிக வளாகங்கள், கேளிக்கை மையங்கள்என பல தொழிற்சாலைகள் தொடந்து இயங்கி வந்துள்ளது. பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இதற்கு அனுமதி அளித்ததும் இந்த பாரிய விளைவிற்கு காரணம் என கூறப்படுகிறது. மிக முக்கியமாக அந்நாட்டின் சராசரி வயது அதிகமாக இருப்பதும் அதிகமான உயிரிழப்புக்கு காரணம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளன.