பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நிறுத்த உறுதி..!!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து இதுவரைக்கும் எந்தவொரு கட்சியும் எந்தவொரு நபரையும் ஜனாதிபதி வேட்பாளராக உறுதி செய்யவில்லை. மேலும் அந்த வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச களமிறங்குவது உறுதியாகி விட்டது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் வேட்பாளராக இறக்கப்படுது உறுதி என தனியார் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 11 ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும், அதோடு அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கையில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய போதும் அவரது வருகையை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும், அவரை வரவேற்பதற்கான இந்தவொரு நிகழ்வும் ஏற்பாடு செய்யவில்லை எனவும், கோத்தாபய குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகாத காரணத்தால் அவரது வருகைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் நிகழ்வு பெருமளவில் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கோத்தாபய ராஜபக்சவை களனி விகாரைக்கு பேரணியாக அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கோத்தாபய ராஜபக்சவை அனுராதபுரம் மகாபோதி விகாரைக்கு வாகனப்பேரணியாக அழைத்து செல்வதற்கான திட்டமும் காணப்படுகின்றன, அதன் பின்னர் அவர் கண்டிக்கும் செல்வார் என தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.