ஸ்பெயினின் பெம்ப்லோனா நகரில் வருடாந்த காளை விரட்டு போட்டியில் 3பேர் படுகாயம்..!!
ஸ்பெயினின் பெம்ப்லோனா (Pamplona) நகரில் நடந்த வருடாந்த காளை விரட்டு போட்டியில் முதல் நாளில், 03பேரை மாடு தன் கொம்புகளால் குத்திக் காயப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த காயத்தில் இருவர் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 53 பேருக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் முதலுதவி சிகிச்சை கொடுத்தனர். மேலும் இந்த காளை விரட்டு போட்டி எதிர்வரும் ஞாயிறுக்கிழமை காலையில் நகரின் குறுகலான வீதிகளில் நடைபெறும் என தெரிவித்தனர்.
850 மீட்டர் நீளமுடைய பாதையில் வெள்ளை நிற உடையும், சிவப்புக் கழுத்துப் பட்டையும் அணிந்த ஆடவர்கள் மட்டும் காளை விரட்டு போட்டியில் கலந்து கொள்ள காத்திருப்பர்கள். ஒவ்வொரு நாளும் 6 காளைகள் விடுவிக்கப்படும். காளைச் சண்டையில் கைதேர்ந்தவர்கள் துரத்திச் சென்று இறுதியில் அந்த காளையை அடக்குவர். அந்த போட்டியில் சிலர் காயமடைவது வழக்கம் என்றாலும், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு யாரும் உயிரிழந்ததாக இல்லை எனவும் தெரிவித்தார்.