பாலியல் துஷ்பிரயோகம், ஆபாச வீடியோ மிரட்டல், கன்னியாகுமரி காசியின் லீலைகளுக்கு உதவிய தந்தை அதிரடி கைது..! இத்தனை மோசடியா.!?
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை போல் அண்மையில் தமிழ் நாட்டை அதிர வைத்த சம்பவங்களில் ஒன்று கன்னியாகுமரி காசியின் பாலியல் துஷ்பிரயோகம், ஆபாச வீடியோ மற்றும் பண மோசடி சம்பவம். கன்னியாகுமரியில் கோழி பண்ணை வைத்திருந்த தங்கபாண்டியன் என்பவரின் மகனான காசி பெண் மருத்துவர் உட்பட அழகான பணக்கார பெண்கள் பலரிடம் தன்னை தொழிலதிபராக காட்டிக் கொண்டதுடன் காதல் என்ற பெயரில் நெருங்கி பழகி பின் நெருக்கத்தை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் பொலீஸில் புகார் கொடுத்தார். இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப் பட்டது தெரிய வர இந்த வழக்கு விசாரணை பொலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது.
சிபிசிஐடியின் விசாரணையில் காசியின் நண்பர்களான ஜினோ, தினேஷ் ஆகியோர் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது காசியின் தந்தையும் கைது செய்யப் பட்டுள்ளார். மகனின் அத்தனை குற்றங்களுக்கும் காசியின் தந்தை தங்கபாண்டியன் துணை போய் உள்ளது தெரியவந்ததை தொடர்ந்து நேற்றைய தினம் சிபிசிஐடியினரால் இவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவரது கைது குறித்து தெரியவருவதாவது காசியை கைது செய்து பொலீஸார் விசாரணை நடத்திய போது பல உண்மைகள் வெளியானது. காசியின் போனில் காசி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, புகைப்படங்கள்,ஆபாச வீடியோக்கள் என ஏராளமானவை கைபற்றப் பட்டது அதே போல் கோழி பண்ணையில் இருந்து லாப் டாப், மற்றும் ஹார்ட் டிஸ்க், மெமெரி கார்ட், மொபைல் போன் போன்றவை கைபற்றப் பட்டது.
இந்த நிலையில் லாப் டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றி இருந்த அத்தனை தடையங்களையும் அழிக்க முயன்றது தங்கபாண்டியன் என தெரியவந்துள்ளது. காசியை கைது செய்ததும் தடையங்களை அழிக்கும் முயற்சியில் ஈடு பட்டதுடன் கந்து வட்டி என்ற பெயரில் மகன் செய்த அத்தனை மோசடிக்கும் தங்கபாண்டியன் உதவியது விசாரணையில் தெரிய வந்தததை தொடர்ந்து நேற்றைய தினம் அவர் கைது செய்யப் பட்டுள்ளார்..!!