சிங்கப்பூரில் பூனைக்குட்டியை கடத்த முயற்சி…!!!
சிங்கப்பூரில் பதிவு செய்த காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 03 பூனைக்குட்டிகளை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் காரைச் சோதனை செய்யும் போது இந்த காரில் இருந்தவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். மயங்கிய நிலையில் இருந்து பூனைக்குட்டிகள் கறுப்புத் துணியில் சிற்றி கடத்தப்பட்டு காரில் இருந்த விரிப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த காரில் 21 வயதுடைய ஓட்டுநரும் 20 வயதுடைய பயணியும் தேசிய சுற்றுப்புற அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதார நிலை குறித்துத் தெரியாத விலங்குகளைச் சிங்கப்பூருக்குள் கடத்துவதால், அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவக்கூடும் என்று குடிநுழைவுச் சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குள் உயிருள்ள விலங்குகள், பறவைகளைக் கடத்தி வருகின்றவருக்கு 10,000 வெள்ளி வரை அபராதமும் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.