சிங்கப்பூர் இயக்குனர் எட்டு இந்திய மொழிகளில் ஒரு படத்தை இயற்றி சாதனை…!!
சிங்கப்பூர் இயக்குனர் ஷில்பா கிருஷ்ணன் என்பவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, அசாமிஸ், வங்காளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 08 இந்திய மொழிகளை பயன்படுத்தி கதா@8 (Kathaah@8) என்ற படத்தை இயற்றியுள்ளார். சிங்கப்பூரில் 8 இந்திய மொழிகள் பயன்படுத்தி படம் இயற்றியது இதுவே முதல் முறையாகும்.
படத்தில் 8 கதைகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் இரவு 8 மணிக்கு நடப்பதாகவும் ஷில்பா தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 18 புதுமுகங்கள் நடித்துள்ளனர். கதா@8, வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி சிங்கப்பூர்த் தெற்காசிய அனைத்துலகத் திரைப்பட விழாவில் வெளியீடு காணப்படும்.
குறித்த 8 இந்திய மொழிகளை ஒன்றாக சேர்த்து உருவாக்கிய இந்த திரைப்படம் 18,000 வெள்ளி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.