வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குப்பைகளை மீண்டும் திருப்பி அனுப்பிய இலங்கை அரசாங்கம்…!!
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு அழகிய நாடாகும். இந்த நாடு இயற்கை வளங்களை சுமாரான காலநிலைகளையும் கொண்ட நாடு. மேலும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பல முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது பிரித்தானியா செய்கின்ற தவறான செயலால் இலங்கையானது ஒரு தரம் குறைந்த நாடாக காணப்படுகின்றது.
மேலும் இந்த நிலையில் பிரித்தானியாவில் இருந்து சதவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் மிண்டும் திருப்பியனுப்பிய இலங்கை அரசாங்கம்.
மேலும் மருத்துவமனை கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த கழிவுகளில் நச்சுப்பதார்த்தங்கள் கலந்திருப்பதால் இலங்கையில் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விடுத்த மனுவை பரிசீலனை செய்த பின்னர் ஜனாதிபதி பிரித்தானிய அரசுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இவ் அறிவிப்பை தொடர்ந்து பிரித்தானியா விசாரித்தது மட்டுமன்றி ஏனைய நாடுகளும் இதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இதில் குப்பைக்கழிவுகள் மாத்திரமின்றி மனித உடற்பாகங்களும் காணப்படுவதாக பிரித்தானியாவின் ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு மனித கழிவுகள் காணப்படுவதாக பிரான்ஸ் செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரிக்கையில் இந்தியா உட்பட சில நாடுகளிலிருந்து கொழும்புக்கு 3,000 டன் குப்பைக் கழிவுகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த கழிவுகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்த 241 கொள்கலன்களை இலங்கை சுங்கத்துறை கண்டுபிடித்து அவற்றில் 15 கொள்கலன்கள் இந்தியாவுக்கும், இரண்டு துபாய்க்கும் திருப்பி அனுப்பப்பட்டன. அது மாத்திரமின்றி முறையற்ற வகையில் கழிவுப் பொருள் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரிட்டனை கடுமையாக இலங்கை எச்சரித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து முறையற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் மீண்டும் பிரிட்டனுக்கே திருப்பி அனுப்ப இலங்கை அமைச்சர் திரு. சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்தோடு சட்ட விரோத இறக்குமதிக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.