வெடித்தது புதிய பிரச்சனை . பிக் பாஸ் 2 வை விட்டு விலகுவாரா கமலஹாசன்..?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி 7 நாளை இன்று தொட்டுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் முதலாவது சீஸன் நேயர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டது இது வரை சீஸன் 2 மந்தமாக போய்கொண்டிருக்கும் நிலையில் புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது .
அதாவது தமிழ் நாட்டில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலாள
ர்களை ஓரம்கட்டியதாக குற்றச் சாட்டு வந்துள்ளது. இந்த விடயத்தை பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே . செல்வமணி தெரிவித்துளார்.400 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் பிக் பாஸ் செட்டில் வெறும் 41 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள் .
இனி அவர்கள் பிக் பாஸில் வேலை செய்ய மாட்டார்கள் என உறுதியாக யூனியன். தலைவர் ஆர். கே. செல்வமணி கூறியுள்ளார்..! அத்துடன் இந்த உணர்வை புரிந்து கமலஹாசன் அவர்களும் நிகழ்ச்சியில் இருந்து விலகுவார் என எதிர்ப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார் .கடந்த சீஸனில் இது போல நடந்தத போது கமலஹாசன் அவர்கள் பேசி 50% வீதமான தமிழ் நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளார் .
இம்முறை மீண்டும் அப்பிடி நடப்பதால் கமல ஹாசன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக செல்வமணி மேலும் தெரிவித்தார்..! பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..!