நிர்வாண வீடியோ கால் (Call ), மார்பிங் போட்டோஸ், 6 இளைஞர்களால் நேர்ந்த துயரம்..! திருமணம் ஆன பெண்களை கூட விட்டுவைக்காத கொடுமை..!!
மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கி கீழக்கரையை சேர்ந்த பெண்கள் பாதிக்கப் படுவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த பொலீஸாரை அதிர வைத்தது இளைஞர் மோசடி குரூப் ஒன்று.
திருமணமான பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருணை தொடர்பு கொண்டு தன்னை பணம் கேட்டு இளைஞர்கள் சிலர் மிரட்டுவதாகவும் தனது நிர்வாண வீடியோக்கள் அவரிடன் இருப்பதாகவும் தன்னை போல் பல பெண்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து அதிரடியாக காலத்தில் இறங்கிய பொலீஸார் சம்மந்தப்பட்ட இளைஞனான கீழக்கரை பார்டு பைசல் என்பவர் கைது செய்யப் பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்கள் கீழக்கரை மட்டும் இன்றி சென்னை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், உட்பட பல இடங்களில் சமூக வலைத்தளத்தில் பெண்களிடம் நண்பராக அறிமுகமாகி பின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்திலும் பின் தொடர்கின்றனர். அதன் பின் அதில் இருந்து பெண்களின் புகைப்படங்களை எடுப்பதுடன் அதனை மார்பிங் செய்து மிரட்டி உள்ளனர்.
அத்துடன் வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மார்பிங் செய்யப் பட்ட புகைப்படங்களை வெளியிடுவாதாக மிரட்டுகின்றனர், இதில் ஏமாறும் பெண்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர் என தெரியவந்தது.இதனை தொடர்ந்து இவர்கள் ஒரு குரூப் என்றும் இந்த குரூப்பின் தலைவன் ஜெர்மனியில் படித்து வரும் முகமது முகைதீன் என்றும் தெரிய வந்தது.
தொடர்ந்து இந்த குழுவினார் பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து முஸ்லீம் மற்றும் ஹிந்து பெண்கள் பலர் பாதிக்கப் பட்டது தெரிய வந்தது. பலர் புகார் கொடுத்த நிலையில் கீழக்கரை முகம்மது முகைதீன், இப்ராகிம் நூர் ( புதுச்சேரி) பார்டு பைசல் ( கீழக்கரை) முகமது ஜாசிம் ( நாகப்பட்டினம்) பாசித் அலி ( சென்னை) ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.
முதலில் நட்பாக பழகி பின் தங்கள் வலையில் பெண்களை விழுத்தி ஏமாற்றி பணம் பறித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து இவர்கள் கைது செய்யசெய்யப் பட்டுள்ளனர்..! இவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் புகாரளிக்க தற்போது தனிப்பட்ட்அ தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது..!!