குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் உடனடியாக தீர..வலி எரிச்சல் கொடுக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்..!
இன்றைய மருத்துவ குறிப்புகளில் நாம் பார்க்கப் போவது குழந்தைகளுக்கான மிக முக்கியமான விடயம் ஒன்றைத் தான். மலச்சிக்கல் இது வரை பெரியவர்களுக்கான மலச்சிக்கலுக்கான மருத்துவத்தை பார்த்து வந்தோம்..இன்று மலச்சிக்கலால் அவதி படும் குழந்தைகளுக்கான தீர்வை பார்க்கலாம்.
எமது வீடுகளில் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் நாம் செய்வது புகையிலை காம்பு அல்லது சோப்பு பகுதியை குழந்தைகளின் பின் பகுதியில் வைப்பதாகும். இதனை எமது பாட்டிமார்கள் இன்று வரை செய்து வருகின்றனர்.
இது சரியா தவறா என்று தெரியாது ஆனால் இதனால் விளைவுகள் ஏற்படுகின்றது. குழந்தைகளின் மலவாசல் எரிச்சல் ஏற்படுவதுடன் புண்ணும் ஏற்படுகின்றது. இதற்கான இலகுவான தீர்வினை பார்க்கலாம்..! இதற்கு தேவையான பொருள் காய்ந்த திராட்சை பழங்கள் மாத்திரமே..
மூன்று மாதத்திற்குள் உள்ள குழந்தை என்றால் காய்ந்த திராட்சைப் பழங்கள் 5 எடுத்து 5கரண்டி நீர் விட்டு 30 நிமிடம் ஊறவிடுங்கள். பின் ஊறிய காய்ந்த திராட்சை பழங்களை மசித்து வடித்து அந்த நீரில் ஒரு கரண்டி வீதம் மூன்று முறை கொடுங்கள்.
இது மூன்று மாதத்திற்கு அதிகமான குழந்தைகளுக்கு 10 வரை காய்ந்த திராட்சை பயன்படுத்தலாம்.