கசக்கும் பாவற்காயில் இருக்கும் நோய் தடுக்கும் மேஜிக் தெரியுமா.? படித்து பருங்கள்..!!
“பாகற்காய்“ என்றதுமே கசப்பின் முகச்சுழிப்பை அனைவர் முகத்திலும் காணலாம். பாகற்காய் பழவகையைச் சார்ந்தது. இது வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பாகற்காயினுடைய ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு மிக மிக உபயோகமானது.இதன் அனைத்துப் பாகமுமே கசப்பானதுவே. இது ஊறுகாய் போடுவதற்குச் சிறந்தது. செராசி என்கின்ற ஒரு வகை பாகற்காயில் ஒரு வகையான பிசின் காணப்படுகி்னறது. அதை மெழுகுவர்த்தி செய்யப் பயன்படுத்துவார்கள். பாகற்காயினுடைய இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பியர் தயாரிக்கவும் சூப்பிற்கு மேலே தூவுவதற்கும் பயன்படுத்துகி்னறனர்.
100 கிராம் பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்.கலோரி- 25 கிராம்.கல்சியம்- 20 மில்லி கிராம்.பொஸ்பரஸ்- 70 மில்லி கிராம். கொழுப்பு- 1.6 சதவீதம். இரும்புச் சத்து- 0.2 சதவீதம்.மினரல்ஸ்- 1.8 மில்லி கிராம்.பாகற்காயினுடைய மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்!பாகற்காயில் குடற்புழுக்களை எடுக்கும் சக்தி உள்ளது.இதனால் இரப்பை வியாதிகளுக்கும் ஒட்டுண்ணி புழுக்களை அகற்றவும் பயன்படுகின்றது.
பாவற்காய்யின் இலைகள் மலேரியாவை தடுக்கும்.மலேரியா போன்று அறிகுறிகள் ஏற்பட்டால் பாகற்காயின் இலைகளை கொதிக்க விட்டு டி போன்று குடிக்கலாம். பாகற்காயின் இலைகள் சின்னம்மை,பெரியம்மை,எச் ஐ வி போன்ற வைரஸ்களையும் அகற்றும்.
பாகற்காய் கொட்டை இதயத்திற்கு நல்லதாகும்.நரம்புகள், தமனிகளில் தேவையற்ற கொழுப்பை இது கரைத்திடும் சக்தி கொண்டது. சர்கரை நோய்க்கும் பாகற்காய் சிறந்த காயாக அமையும், புற்றுநோய் எதிர்ப்பிற்கும் சிறந்த காய் ஆக அமையும்.தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.
பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், கண்கூடாகப் பலனைக் காணலாம்.
இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். இதேபோல் பாலிபெப்டைடு பி ( Polypeptide P) என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும்.