பணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உடனடியாக இதனை செய்யுங்கள்..!!
கொரோனா வைரஸினால் மரணங்கள் உலக அளவில் அதிகரித்து வருகின்றது. அத்துடன் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் 10 லட்சத்திற்கு அதிகமான மரணங்கள் நிகழும் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சில காரணங்களை மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய பங்கு ஆடைகள், சப்பாத்து, செருப்பு, போன்றவற்றை தானாம். அடுத்து பணம் பொதுவாக ரூபாய் நோட்டுகளில் பல மணி நேரங்கள் உயிர் வாழ்கிறதாம்.
மற்றைய அனைத்து பொருட்களிலும் அதிக கவனம் செலுத்தும் நாம் பணம் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. பணத்தை எம்மால் கழுவ முடியாது, அதனால் நாம் தான் சுத்தமாக இருக்க வேண்டும். பணத்தை தொட்டால் கைகளை சானிடைசர் அல்லது சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
வெளியே பணத்தை பரிமாறிக் கொண்ட பின் மூக்கு, வாய், முகம் போன்ற பாகங்களை தொடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும். பணத்தை பாதுகாப்பான இடத்தில் வைத்தபின் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். இப்படி செய்வதால் ரூபா நோட்டில் இருந்து பரவும் அபாயம் குறையும் என தெரிவித்துள்ளனர்…!