கொடுமையான நோய்களை தீர்க்கும் முட்டைகோஸ்..! யாரும் அறியாத இயற்கை வைத்தியம் இதோ உங்களுக்காக…!!
புரட்சி வானொலி நேயர்களுக்கு வணக்கம்: இன்றைய மருத்துவ குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போவது கோவா (கோஸ்) இலைகளை வைத்து சில மருத்துவங்கள் தான். இது அனுபவ பதிவு என்பதால் நீங்களும் உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முட்டைக்கோஸ் இலைகள் மருத்துவ குணம் வாய்ந்தது குறிப்பாக வீக்கங்கள் அடிபட்ட வலி போன்றவற்றிக்கு இந்த இலைகள் மிகவும் உதவுகின்றது. கால் கையில் ஏதேனும் அடி பட்டு வீக்கத்துடன் வலி இருந்தால் கோவ இலைகளை பச்சையாக வைத்து அதன் மேல் துணி ஒன்றை சுத்தி கட்டி விடுங்கள்.
வலி குறைவதுடன் வீக்கமும் வத்திவிடும்.சிலருக்கு உடலில் காயங்கள் இருந்தால் தொடையில் நெரிக்கட்டி என்று சொல்லக் கூடிய வலியுடன் கூறிய கட்டிகள் வரும். அதற்கும் இந்த கோஸ் இலைகளை கொஞ்சம் நெருப்பில் வாட்டி மிதனாம சூட்டுடன் அந்த வலி உள்ள கட்டியின் மீது வைத்துவிடுங்கள். முடிந்தால் துணியால் கட்டிவிடுங்கள். வலி நின்று கட்டியும் மறைந்துவிடும்.
அதே போல் பால் கொடுக்கும் தாய் மாருக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சனை தான் தாய்ப்பால் கொடுக்கும் போது வலி, அல்லது பால் கட்டிக் கொண்டு வலி, அதே போல் கருப்பு காலத்தில் மார்ப்பக வலி, இளம்பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மார்ப்பக வலி என அனைத்திற்கும் இந்த மருத்துவம் சூப்பரானது.
வலி தீர கோவா இலைகளை மார்பக பகுதியில் வைத்து உள்ளாடை அணியுங்கள், அல்லது ஏதேனும் இறுக்கமான ஆடை அணியுங்கள். இப்படி செய்வதன் மூலம் வலி வீக்கம் போன்றவை குறைவதுடன் மார்பக புற்றுநோய் இருந்தால் கண்டுபிடிக்க உதவுகிறது. இது போல் நல்ல மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு தொடர்ந்து வேண்டும் என்றால் மருத்துவ குறிப்புகளை பகிர்ந்துகொள்ளுங்கள்..!-