நரம்பு தளர்ச்சிக்கு உடனடி தீர்வாகும் பப்பாளி பழம்..! இதனுடன் கலந்து சாப்பிட்டால் போதுமானது..!!
எல்லோருக்கும் இலகுவாக கிடைக்க கூடியபழம். மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது.இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. 18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும்.கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பப்பாளிபழத்தை சாப்பிடக்கூடாது.
பப்பாளிபழத்தை குடலில் பூச்சிகள் இருந்தால் சாப்பிடலாம். முகச்சுருக்கத்தையும் நீக்கும்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், பல் உறுதியாவும் பப்பாளி பழத்தை சாப்பிட கொடுக்கலாம்.கல்லீரலில் வீக்கம் இருப்பவர்கள் தினமும் பப்பாளிபழத்தை சாப்பிடலாம்.
குண்டாக இருப்பவார்கள் பப்பாளி காயை எடுக்கலாம்.
நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், பப்பாளிபழத்தை தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.நாக்குப்பூச்சி உள்ளவர்கள் பப்பாளி விதைகளை பாலோடு அரைத்து சாப்பிட்டால் அழிந்துவிடும்.வாயில் புண் வந்தால் ஒன்றும் சாப்பிட முடியாமல் இருக்கும். அதற்கு பப்பாளிக் காயின் பாலை எடுத்து புண் உள்ள இடங்களில் பூச சரிவரும். இதை குழந்தைகளுக்கும் பூசலாம்
உடம்பில் ஏதாவது கட்டிகள் வந்தால், பப்பாளியை இலைகளை அரைத்து அதில் பூசினால் கட்டி உடைந்து விடும். வீக்கங்கள் இருந்தாலும் பூசலாம்.தேள் கொட்டினால் பப்பாளி விதைகளை பூசினால் விஷம் இறங்கிவிடும்.
பிரசவமடைந்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பப்பாளிக்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால், பால் சுரக்கும்.