இந்தோனேசியா மொலாக்கா கடற்பகுதியில் நிலநடுக்கம்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
இந்தோனேசியா மொலாக்கா (Molucca) கடற்பகுதியில் நேற்று இரவு ரிக்ட்டர் அளவில் 6.9ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த கடற்பகுதியில் சிறிது நேரத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் வாழ் மக்கள், அச்சம் அடைந்து தாழ்வான இடங்களில் இருந்து வெளியேறினர்கள்.
மொலாக்கா கடற்பகுதியில் 24 கிலோமீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டது. மனாடொ (Manado) தீவில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. உடல் சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.