இவ் வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசை டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோர் பெறுகின்றனர்.
கொங்கோவைச் சேர்ந்த வைத்தியர் டெனிஸ் முக்வேஜா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலர் நாடியா முராத் ஆகியோருக்கு இவ் வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போரில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பாவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரப் பாடுபட்டமைக்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
மருத்துவர் டெனிஸ் கொங்கோவில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக போராடியவர். பாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மருத்துவ சேவையை வழங்கிய இவர் தொடர்ச்சியாக இச் சேவையை அங்கு மெற்கொண்டுள்ளார்.
அவ்வாறே ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் கொடுமைகளுக்கு உட்பட்ட யாழிடி இன சமூகநல ஆர்வலர் நாடியா முராத்தும் இன்றும் ஈராக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றார்.
அவரது 6 சகோதரர்களை கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள் அவரையும் கைது செய்து பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்திய நிலையில் அதிலிருந்து தப்பித்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெண்களை எவ்வாறு நடாத்துகின்றார்கள் என்பதை உலகுக்குக் கொண்டு சென்றவர். இவர் ஐ.நா வினால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”