30 வயதை கடந்த பெண்ணா நீங்கள்.? இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா.!? அப்படியானால் ஆபத்து.. இதை படியுங்கள்..!!
பெண்கள் 30 வயதை கடந்துவிட்டால் போதும் எலும்பு சம்மந்தமான நோய்கள் அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடும். குறிப்பாக முழங்கால், முழங்கை, கழுத்து, முதுகு என வலி உயிரை எடுக்க ஆரம்பித்துவிடும். இதற்காக நாம் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டால் போதும் என நினைக்கிறோம்.
ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் பல வலி நிவாரணி மாத்திரைகள் வலியை கட்டுப் படுத்த மட்டும் தானே தவிர குணப்படுத்துவதற்கு அல்ல. இன்று பெண்களுக்கு ஏற்படும் Osteoporosis எனும் எலும்புப்புரை நோய்க்கான மருத்துவத்தை பார்க்கப் போகின்றோம்.
உங்களுக்கு முதுகு தண்டு முழங்கால் வலி போன்றவை அதிகம் ஏற்பட்டால் முதலில் சென்று வைத்திய ஆலோசனை பெறுங்கள் வைத்தியர்கள் Osteoporosis என்பதை உறுதி படுத்தினால் முதலில் மது பானம் அருந்துவதை நிறுத்திவிடுங்கள். அதன் பின் கீழ் குறிப்பிட்ட முறையில் உங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாற்றுங்கள். காலையில் எழுந்ததும் ஒரு கப் பால் குடியுங்கள்.
அதன் பின் தானிய வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். தோசை இட்லி போன்றை கூட சாபிடலாம் ஆனால் கடலை,கவுபி,பாசிபயறு போன்றவற்றை சாப்பிடுதல் சிறப்பானதாகும். அடுத்து பகல் உணவில் சாதத்துடன் கீரை, பருப்பு, மீன், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உணவில் கீரை, பருப்பு வகைகள் இருக்க வேண்டும். இரவு உணவு ஏதேனும் இலகுவான உணவாக இருக்கலாம் ஆனால் பால் ஒரு கப் கண்டிப்பாக குடியுங்கள். இவற்றுடன் சிறிய உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்ய முடியாதுப்பா என்பவர்கள் நடைபயிற்சி செய்யலாம். காலையில் சிறிது தூரம் நடப்பதும் சிறந்த நடை பயிற்சியாகும். இதனை மட்டும் செய்தால் போது உங்களுக்கு மூட்டு வலிகள் ஜென்மத்திலும் வராது.!