பிரித்தானிய கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமிகளை ஈரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சந்திக்க அனுமதி…!!!
பிரித்தானியா மற்றும் ஈரான் இரு நாடுகளுக்கு இடையில் பதற்ற நிலை உருவாக்கி வருகின்றது. மேலும் பிரித்தானியாவின் இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளமை தொடர்பில் பிறத்தனியா அரசாங்கம் தொடர்ந்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
பிரித்தானிய கப்பலில் வேலை செய்யும் 18 இந்திய மாலுமிகளை ஈரான் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களை சந்திப்பதற்கான அனுமதி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ஈரான் வழங்கியுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள ஈரானிய தூதுவர் ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
18 இந்திய மாலுமிகள் அனைவரும் பயப்படாத நிலையில் அமைதியாக உள்ளனர் என அவர்களை பார்வையிட்டதன் பின்னர் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல, வேற்று நாட்டை சேர்ந்த 5 மாலுமிகளை சந்திப்பதற்கான செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாட்டு கொடியுடன் சென்ற எண்ணெய் தாங்கி கப்பலை, ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் நேற்றைய தினம் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.