தற்போது பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ அல்லது என்ன நடந்திருக்குமோ என துடித்துக் கொண்டிருக்கும் விடயம் பொள்ளாச்சி கொடூரர்களின் கேவலமான செயல். அப்பாவி பெண்களை காதலெனும் பெயரில் மயக்கி கற்பழித்து ஆபாச வீடியோ எடுத்து அதனை வைத்து பணம் பறித்து..இப்படி அடுக்கிக் கொண்டே போகும் கொடூரங்கள். இது பற்றி பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் சிலர் கூறும் கருத்து தான் இந்த பெண்கள் ஏன் சென்றார்கள். ? இவர்களும் ஆசையில் தானே சென்றார்கள், பின் ஏன் அவர்களை குற்றம் சொல்கிறீர்கள்?
ஆனால் உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள் இதில் தவறு சென்ற பெண்கள் மீது மட்டும் தானா? அவள் ஆசையில் சென்றிருந்தால் எதற்கு கதற போகிறாள்? நம்பிக்கைக்கும் ஆசைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. வெறும் 4 இளைஞர்கள் 273 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து
1000க்கு மேட்பட்ட வீடியோ எடுத்திருகின்றார்கள். 273 பெண்களை சரியாக வளர்க்கவில்லை என்று சொல்லும் நீங்கள் இந்த வெறும் நான்கு இளைஞர்களை சரியாக வளர்த்திருந்தால் 273 பெண்கள் தப்பி இருப்பார்கள் என்று ஏன் கூற மறுக்கிறீர்கள். கல்லூரி மாணவி கதறுகிறாள்..
“அண்ணா அடிக்காதீங்க லெகின்ஸ் கழட்டுகிறேன் என” ஒரு நிமிடம் அந்த பெண்ணின் நிலையில் இருந்து சிந்திக்க முடியுமா? அவளது ஒட்டுமொத்த உடலின் வலியை அந்த மனம் எப்படி தாக்கி இருக்கும்.
பெண்களை சரியான முறையில் எப்படி வளர்க்க வேண்டும் என நினைகிறோமோ..
ஆண்களையும் அப்படி வளர்த்தால் அழிவுகள் குறையும். இன்று குற்றவாளியாக நிற்கும் கயவர்கள் பணத்தை கொடுத்து இன்னும் சில வருடங்களில் வெளியே வந்துவிடுவார்கள். உங்கள் வீட்டில் மகள்கள் பத்திரம். ஒரு நிமிடம் இந்த அழு குரலை கேளுங்கள் இனியும் உங்கள் மனம் பெண்களை மட்டுமே குறை கூறினால் வாழ்க உங்கள் வீட்டு பெண்கள்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”