இலங்கைத் தமிழரால் தமிழ் வாழும் – புகழ்ந்து பேசிய நடிகர் விவேக்…!
தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 150 ஆண்டு நிறைவு தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது “உலகில் கடைசி இலங்கைத் தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழுக்கு இலங்கைத் தமிழர் புகழ் சேர்க்கின்றார்கள் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இராமகிருஸ்ன மிஷன் ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பல முக்கிய பிரமகர்களும் கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் சுவாமி விவேகானந்தரின் நூற்கள் அடங்கிய பொதி ஒன்றும் நடிகர் விவேக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”