பல் வலியில் இருந்து நொடியில் தீர்வு வேண்டுமா.!? இதோ சூப்பர் மருந்து..! 100% உண்மை..!!
பிரசவ வலி உணராத யாரிடமாவது நீங்கள் சென்று கொடுமையான வலி என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே வலி பல் வலி தான். ஒருவருக்கு பல் வலி வந்தால் தாங்குவது என்பது முடியாத விடயம் தான். என்ன தான் இரண்டு முறை பிரஷ் பண்ணினாலும் பற்களில் சொத்தை விழுவதை தடுக்க முடியாது.
ஒரு சிலர் தங்கள் பற்களை ஆரோக்கியமான முறையில் வைத்துக் கொள்ள இயற்கை வலி முறைகளையே பயன் படுத்துகின்றனர். இன்று நாமும் எம் பற்களை பாதுகாக்கும் இயற்கை முறைகள் பற்றி பார்க்கலாம். வாரத்தில் இரண்டு முறை கொய்யா இலை நீரால் வாய் கழுவ வேண்டும்.
இதற்கு 5 தொடக்கம் பத்து கொய்யா இலைகளை எடுத்து ஒரு கப் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொதித்ததும் இறக்கி வடித்து ஆற வைத்து வாயை நன்றாக கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வாயில் கிருமிகள் தங்காது.அடுத்து பல் வலி பல் சொத்தைக்கு இதனை செய்யுங்கள். கொய்யா புதிய இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவற்றை நன்றாக இடித்து சாறு எடுங்கள். அரைகரண்டி சாறு போதுமானது. இதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸ் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை சிறிய துணி ஒன்றில் சுற்றி சாறு பல்லில் படும் படி வையுங்கள். சிறிது நேரத்தில் பல் வலி முற்றாக நீங்கிவிடும். அத்துடன் பல்லில் உள்ள கிருமிகளும் இறந்து விடும்.
இதனால் பற்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கொய்யா இலை மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக இருக்கிறது. அதனால் எந்த கவலையும் இன்றி இதனை செய்யலாம்..!! முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!