முத்தம் கிளப்பிய சர்ச்சை! இது என்னடா புது புரளி!
உலகத்துல எது எது எல்லாமோ சர்ச்சையை தூண்டியிருக்கு. அதில முத்தம்தான் எப்போதும் முன்னிலையில் இருக்கிறது என்பதை ரஸ்யாவில் கால்பந்தாட்டப் போட்டியின் போது நிகழ்ந்த சம்பவமானது நிரூபித்துள்ளது.
ஆம் அந்த முத்தத்தை பெற்ற அதிஷ்டாசாலி ஜியோன் க்வாங்-ரியூல் என்கிற தென்கொரியாவின் பிரபலமான எம்பிஎன் தொலைக்காட்சி நிருபர் ஆவார்.
இவர் ஜூன் மாதம் 28 ஆம் திகதி ரஸ்யாவில் உழைக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டியை நேரலை ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரை முத்தமிட்டுள்ள காட்ச்சியும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஒரு முறையல்ல 2 முறை இந்த முத்தச் சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
இதை பார்த்த சீனாவின் சமூக வலை தளமான வெய்போவில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இது அந்த நிருபருக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை என்பதாகவும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் அந்த முத்தம் வாங்கிய நிருபர் அதை சிரித்துக் கொண்டே கடந்துள்ளார். பார்த்த இவர்கள்தான் குய்யோ முறையோன்னு கத்துறாங்க. இதே ஒரு பெண் நிருபரிற்கு நிகழ்ந்த போது அது பாலியல் தொல்லையாக கூறப்பட்டது. ஆண்கள் என்ன கிள்ளு கீரைகளா என்று கொதித்தெழுந்துள்ளனராம் சீனாவின் ஆணியவாதிகள்.
அட போங்கய்யா ஒரு நாய் மனுசனா கடிச்சா அது செய்தியில்லை! ஒரு மனுஷன் நாயக் கடிச்சாத்தான் அது விவகாரம்! புரிந்ததா?
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்
இன்றைய வீடியோக்கள்!!