உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடைய இன்னொரு நபர் கைது..!!!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான். அம்பாந்தோட்டையில் உள்ள அவரது ஆயுத பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சஹ்ரான்னுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த 25 வயதுடைய சந்தேக நபர் நாவலபிட்டியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் சிங்கபூரில் வைத்து இந்த சம்பவம் தொடர்பாக இன்னொரு நபர் கைது செய்யப்படடர். இதனை தொடர்ந்து குத்துப்டீன் ஹாஜா நஜாமுதீன் என்ற 36 வயதுடைய குறித்த நபர், கடந்த மாதம் அங்கு கைது செய்யப்பட்டதுடன், அவரது உதவியாளரான சுடர்மான் சமிகின் என்ற மற்றுமொரு நபர் இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .
மேலும் இந்த இரண்டு சந்தேக நபரும் சிரியாவிற்கு சென்று இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளுடன் இணைந்துக் கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரியவருகிறது. குத்துப்தீன் ஹாஜா என்பவர் சஹ்ரான் ஹாசிமின் ஆதரவாளர் என்றும், அவர் சஹ்ரானுக்கும் அவரது அமைப்புக்கும் நிதி கொடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.