விங் கமாண்டர் அபி நந்தன் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானத்தின் விங் கமாண்டர் “ஷாகஸ் உத்தின்” மக்களால் அடித்துக் கொலை..! உறுதி படுத்தினார் வழக்கறிஞர் காலித் உமர்.!
அபி நந்தன் விடுதலையை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல் உலக நாடுகளும் இதனை வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் அபி நந்தனை விடுதலை செய்வதாக கூறி இராணுவ மரியாதையுடன் இராணுவத்தினரிடம் ஒப்படைந்தார்கள். இதனால் பாகிஸ்தான் உலக நாடுகளின் கண்டனங்களில் இருந்து தப்பித்தது. அபி நந்தனை யார் சுட்டு வீழ்த்தியது? எந்த விமானம் இந்த தாக்குதல் நடத்தியது போன்ற கேள்விக்கு “ஷாகஸ் உத்தின்” விமானத்தால் சிறிய தாக்குதலுக்கு உள்ளான மிக் 21 தரைப்படையினரின் தாக்குதலால் வீழ்ந்தது. .
ஆனால் வீழ்வதற்கு முன் எப் 16 விமானத்தை தாக்கிவிட்டே அபி குதித்தார்.! விமானத்தில் இருந்தவர் ஷாகஸ் உத்தின், இவர் பாகிஸ்தான் விமானபடை வீரர். எப் 16 ரக விமானம் ஓட்டுவதில் கில்லாடி. பாகிஸ்தான் விமான படையினரால் பல பாராட்டுகள் பெற்றவர். குறிபார்த்து இலக்கை தாக்கும் திறமை கொண்டவர். உயிரை கையில் பிடித்தபடி அபிநந்தன் பதில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு விமானிகளுமே பரசூட் மூலம் குதித்தனர்.
இதில் இருவரும் பாகிஸ்தான் எல்லைக்குள் வீழ்ந்தனர். இந்திய விமானம் சுடப் பட்டதையும் விமானி தப்பியதையும் அறிந்த பாகிஸ்தான் மக்களின் கையில் முதல் கிடைத்தவர் சாகும் அரை மயக்கத்தில் இருந்தவரை அடித்து துன்புறுத்திய மக்களிடம் இருந்து ஷாகஸை காப்பாற்ற பாகிஸ்தான் இராணுவத்தினர் வந்த நேரம் தாமதமாகிவிட்டது.
உயிருக்கு போராடிய நிலையில் வைத்திசாலையில் சேர்த்த போது உயிர் பிரிந்துவிட்டது.அதே போல் அபி நந்தனையும் மக்கள் தாக்கியுள்ளனர். இராணுவத்தினர் தலையீட்டால் எப்படியோ தப்பிவிட்டனர். பாகிஸ்தான் செய்திகளில் இந்திய விமானிகள் இருவர் பிடிபட்டனர் என்று வெளியாகி பின்பு அபி நந்தன் என்பது மட்டும் உறுதியானது. ஷாகஸ் பற்றி பாகிஸ்தான் மறைக்க ஆரம்பித்த போதும்..
லண்டனில் வசிக்கும் ஷாகஸின் உறவினரும் பாகிஸ்தான் வழக்கறிஞருமான காலித் உமர் வெளிபடுத்தியுள்ளார். விமான படை அதிகாரி ஒருவரின் மகனான விங் கமாண்டர் ஷாகஸ் மரணமடைந்துள்ளார். இவரை மக்களே அடித்து கொண்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இதனை நாம் உறுதி படுத்துகிறோம் என அவரே உறுதி படுத்தியுள்ளார்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”