எகிப்திலிருந்த224 சிங்கப்பூர்வாசிகள் அழைத்து வந்த சிறப்பு விமானம்..!!
எகிப்திலிருந்த 224 சிங்கப்பூரர்களை சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூர் அழைத்து வந்தனர். அவர்களில் 211 பேர் மனவர்களாவார்கள். கெய்ரோவிலுள்ள அல் அசார் (Al-Azhar) பல்கலைக்கழகத்தில் அவர்கள் பயில்வதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அமைச்சு, MUIS எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானம் இன்று காலை சிங்கப்பூர் வந்தடைந்தது. எகிப்து, பயணிகள் விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்ததால் அந்தச் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்கப்பூரின் சிறப்பு விமானத்தில் வந்த அனைவரும் 14 நாள் வீட்டிலேயே தங்கும் கட்டாய உத்தரவின் கீழ் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வர் என்று அமைச்சு கூறியது.