சிங்கப்பூரில் 40 வயது மலேசிய நபர் ஒருவர் பலி..!!
நேற்றைய தினம் சிங்கப்பூரில் 40 வயதுடைய மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான 4.754 ஆவது நபரான அந்த மலேசிய நபரின் மரணத்துக்குக் கொரோனா தொற்று காரணமல்ல என்றும், இதயக்கோளாறு காரணமாகவே அவர் உயிரிழந்தகவும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
மலேசியா நடமாட்டக் கட்டுப்பாட்டை அறிவித்த பிறகு, சிங்கப்பூரில் வேலைசெய்யும் மலேசிய ஊழியர்கள் பலர் இங்கேயே தங்கி வேலை செய்யத் தொடங்கினர். சிங்கப்பூரில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,992-க்கு உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 942 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில், பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.