சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிக்குச் சென்றார் அமைச்சர் சண்முகம்!
சிங்கப்பூரில் கொடிய கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ள வேளையில், வெளிநாட்டு ஊழியர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவதாக சட்ட,உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்திருந்தார். Westlite Papan தங்கும் விடுதிக்குச் சென்ற அமைச்சர் அங்குள்ளோரைச் சந்தித்துப் பேசினார். சுமார் 80 ஊழியர்கள் அமைச்சரிடம் தங்களது அக்கறைகளைத் கூறினார். அவர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் கிடைக்கும் என்று உறுதி வழங்கியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களின் ஆரோக்கியம், உடல்நலன் ஆகியவை பேணப்படும் என்று திரு. சண்முகம் உறுதி அளித்துள்ளார். சிங்கப்பூரில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு ஊழியர்கள்.