சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் நபர் ஒருவர் பலி..!!
சிங்கப்பூரில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேர்ந்த 12ஆவது மரணம் இதுவே. சிங்கப்பூரைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம்மாதம் 2-ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட மாது, நேற்று முன் தினம் உயிரிழந்தார். கூ டெக் புவாட் மருத்துவமனை அவரின் குடும்பத்தைத் தொடர்புகொண்டுள்ளது. குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவை அது வழங்கி வருகிறது. அதற்கு இடையில் சிங்கப்பூரில் நேற்றைய தினம் மேலும் 1,016 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டது. மேலும் 8 கிருமிப் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டன.
அவை
- 10 கிராஞ்சி லிங்க் (Kranji Link)
- 32 துவாஸ் வியூவ் ஸ்குவெர் (Tuas View Square)
- 36 துவாஸ் வியூவ் ஸ்குவெர்
- 40 துவாஸ் வியூவ் ஸ்குவெர்
- 61 செனோக்கோ டிரைவ் (61 Senoko Drive)
- 8 சுங்கை காடுட் அவென்யூ ( 8 Sungei Kadut Avenue)
- 18 சுங்கை காடுட் அவென்யூ (18 Sungei Kadut Avenue)
- 10 லோரோங் 14 கேலாங்கில் அமைந்துள்ள விங் ஃபோங் கோர்ட் (Wing Fong Court located at 10 Lorong 14 Geylang)
புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 967 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் சிங்கப்பூரர்கள், நிரந்திரவாசிகளின் எண்ணிக்கை 15. மேலும் 57 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, மொத்தம், 896 பேர் குணமடைந்துள்ளனர். 4,234 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.