சிங்கப்பூரில் புதிதாக 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!!
சிங்கப்பூரில் புதிதாக 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். 7 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் போன்றவர்களுக்கு இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,693 ஆக அதிகரித்ததுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 25 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளன.