யாழ்ப்பாணத்தின் நிலையை பார்த்தீர்களா? 5000 ரூபாய்க்கு கூட மஞ்சள் இல்லையாம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. கொழும்புச் சந்தையில் 2,500 ரூபாவுக்கு மஞ்சள் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் காரணமாக மஞ்சள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதில்லை என்று நகர வர்த்தகர்கள் கூறுகின்றனர். இலங்கை அரசாங்கம் மஞ்சளுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளது. மஞ்சள் 750 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்று வர்த்தமானி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கும் வரையில் 650 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்த பின்னர் அதன் விலை உச்சம் அடைந்துள்ளது. அதற்கு இடையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்கு மஞ்சள் கரைத்து தெளித்தால் நல்லது என்ற ஆயுள்வேத அறிவுரையை அடுத்து மஞ்சளுக்கான கேள்வி அதிகரிக்க அது 2ஆயிரம் ரூபா தொடக்கம் 2 ஆயிரத்து 500 ரூபா வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. கொழும்புச் சந்தையில் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் அதனை யாழ்ப்பாண வர்த்தகர்கள் கொள்வனவு செய்வதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து மஞ்சளை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சள் போதியளவு இறக்குமதி செய்யப்பட்டால் 750 ரூபாவுக்கு யாழ்ப்பாணத்தில் அதனை விற்பனை செய்ய முடியும் என்று நகர வர்த்தகர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலினாலும் ஊரடங்கு சட்டத்தினாலும் முடக்கப்பட்டிருக்கும் வடக்கு மக்களுக்கு உதவுங்கள்.