சிங்கப்பூரில் புதிதாக 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!
சிங்கப்பூரில் புதிதாக 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமானவர்கள் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 6 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,641 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். புதிதாகக் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக மேல் விவரங்களை அமைச்சு இன்றிரவு வெளியிடும்.