திருமணமான இரண்டு மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்..!! தமிழகத்தில் நடந்த சோகம்!
திருமணமான இரண்டு மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புதுமணப்பெண்ணின் செயல் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திருவள்ளூரிலுள்ள வல்லூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பத்மப்ரியாவுக்கும் மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராமுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆவடி காவலர் பயிற்சி பள்ளியில் காவலராக பணியாற்றி வரும் ராஜாராம், வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்து வருவதாக பத்மப்ரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னரே புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பத்மப்ரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் பத்மப்ரியாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பத்மப்ரியா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அதில் தனது இந்த நிலைக்கு காரணம் கணவரும், அவரது குடும்பத்தினரும் தான் என்றும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய, தங்கள் மகளின் மரணத்திற்கு காரணமாகிய ராஜாராம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மீஞ்சூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.