சிங்கப்பூரின் வரவு செலவுத் திட்டம் நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் தாக்கல்…!!
நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் நிதி வளங்களை நிர்வகிக்கும் பொறுப்பு எட்டு நிதியமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்பு அவசியமானது. யார் அந்த நிதியமைச்சர்கள்? அவர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் என்னென்ன? ஒரு பார்வை,
1. திரு. லிம் கிம் சான் (முதல் நிதியமைச்சர்)
தவணைக் காலம்: 1965-1967
வரவுசெலவுத் திட்டத்தின் கவனம்:
ஏற்றுமதிகள் சார்ந்த பொருளியலை உருவாக்குதல். மனிதவளம் அதிகம் தேவைப்படும் துறைகளின்மூலம் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குதல்.
முக்கிய அறிவிப்புகள்
– 1965ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டதில் 5 ஆண்டு மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
– ஊழியரணியில் நுழையும் 95,000 பேருக்கு வேலை வழங்குவதில் கவனம்
– ஏற்றுமதிச் சந்தையை முக்கியமாகக் கொண்டு தொழில்துறையின் அடித்தளத்தை உருவாக்க வலியுறுத்தப்பட்டது
– வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மலிவான 12,000 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
– 1966 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சிங்கப்பூர் உற்பத்தித்திறன், தரநிலைக் கழகம் அறிமுகம் செய்யப்பட்டது.
2. டாக்டர். கோ கெங் சுவீ (இரண்டாம் நிதியமைச்சர்)
தவணைக் காலம்: 1967 – 1970
வரவுசெலவுத் திட்டத்தின் கவனம்: வெளிநாட்டு முதலீட்டை அதிகமாக ஈர்க்கும் சூழலைச் சிங்கப்பூரில் உருவாக்குதல்.
முக்கிய அறிவிப்புகள்
– சதுப்புநிலமாக இருந்த ஜூரோங் வட்டாரத்தைத் தொழில்துறைப் பேட்டையாக உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
– 5 பெரிய உயர்தர ஹோட்டல்களை உருவாக்குவது. சிங்கப்பூருக்கு அப்போது அதிக அளவில் சுற்றுப்பயணிகள் வந்தனர். அவர்கள் இங்கு தங்குவதற்குப் போதுமான ஹோட்டல் அறைகள் இல்லை. அந்தப் பற்றாகுறையைச் சமாளிக்க 1,509 ஹோட்டல் அறைகள் உருவாக்கப்பட்டன.
– 1968ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ராணுவத்தின்மீது கவனம் செலுத்தப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு 337.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டது.
3. திரு. ஹான் சுய் சென் (மூன்றாம் நிதியமைச்சர்)
தவணைக் காலம்: 1970-1983
வரவுசெலவுத் திட்டத்தின் கவனம்: அனைத்துலகச் சந்தைகள் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம். தொழில்நுட்பத்தின்மூலம் நிலையான வளர்ச்சியடைதல், நவீனத் திறன்களுக்கான மேம்பாட்டிற்குப் பங்களித்தல்.
முக்கிய அறிவிப்புகள்
– செந்தோசா தீவைச் சுற்றுலாத் தலமாக மாற்றவும் சிங்கப்பூரின் கல்வி நிலையை உயர்த்தவும் அதிக நிதி ஒதுக்கீடு
– அங்கீகாரம் பெற்ற உள்ளூர் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையில் அரசாங்க மானியம்.
– கல்வி, மனிதவள மேம்பாட்டிற்கு 577 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு.
– பல்கலைக்கழகங்களுக்கான விரிவாக்கத் திட்டம்
4. டாக்டர். டோனி டான் கெங் யாம் (நான்காம் நிதியமைச்சர்)
தவணைக் காலம்: 1983-1985
வரவுசெலவுத் திட்டத்தின் கவனம்:
தொழில்மயமாதலுக்கும், தொழில்நுட்பத்துக்கும் அதிக முன்னுரிமை. மனிதவளம் அதிகம் சார்ந்த துறைகளிலிலிருந்து உயர்தரத் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளுக்கு மாறுதல்
முக்கிய அறிவிப்புகள்
– புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் உள்ளூர் நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டது.
– கட்டடத் துறை மேம்பாட்டுக் கழகத்தை அமைத்தல். தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆலைகள் நிறுவ அந்தக் கழகம் ஊக்குவித்தது. கட்டடத் தொழில்நுட்பங்களுக்கான தரநிலையை மறுஆய்வு செய்தல்
தகவல்: நிதியமைச்சின் இணையத்தளம்