இந்தியா விமான நிலையத்தில் வைத்து அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள்…!!! பெண்ணின் கைப்பையில் இருந்தது என்ன??
சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வரும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 8.00 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 27 வயதுடைய கமரூதீன் மற்றும் அவரது உறவினரான 23 வயதுடைய ரகீலா ஆகியோரும் வந்தனர்.
!Advert!
அப்போது அங்கிருந்த விமான அதிகாரிகள் அவர்களிடம் ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அதற்கு நாங்கள் உள் நாட்டு பயணிகள் ஏன் எங்களை விசாரிக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர்கள் நீங்கள் சர்வதேச விமானத்தில் வருகிறீர்கள் சந்தேகப்பட்டால் உங்களை சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி அவர்களை சோதனை செய்யும் போது ரகீலாவின் கைப்பையில் இருந்து தங்க செயின்கள் மற்றும் மோதிரங்களை பறிமுதல் செய்தனர்.
!Advert!
பின்னர் மற்றொருவரை சோதனை செய்யும் போது அவரது உள் ஆடைக்குள் கனமான இரண்டு செயின்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் இருவரிடமிருந்தும் 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 34 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.