இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று..!!
இன்றைய தினம் பகல் மாறும் இரவு வேளைகளில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவௌ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியாக சூரியவௌ மைதானத்தில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3 வருடங்களின் பின்னர் அங்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது. அதே நேரத்தில், சூரியவௌ மைதானத்தில் 5 வருடங்களின் பின்னர் பகலிரவு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது. சூரியவௌ மைதானத்தில் 19 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை அணி, 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.