இந்திய அணி நிச்சயமாக நியூசிலாந்தை பழிவாங்கும் – கிளான் மெக்ராத்
இந்தியா நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், 2ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், நான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய இஷாந்த் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்றே நினைத்தேன்.
ஆனால் அவர் மீண்டும் வந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். இந்திய பவுலிங் யூனிட்டின் மீது எனக்கு இன்னும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்தது மட்டும் தான் பின்னடைவு. இஷாந்த் சர்மா காயத்திலிருந்து மீண்டு வந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வருகிறார். ஒரு போட்டியை வைத்து குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அணி உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது, நிச்சயம் பதிலடி கொடுக்கும் திறமை அந்தணிக்கு இருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.