இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று..!!
இன்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு சர்வதேச ஒரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று 2 க்கு 0 என்ற கணக்கில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.