இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 போட்டி இன்று..!!
இன்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி கண்டி – பல்லேகலை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டியை வெற்றி கொள்வதற்கான மனநிலை வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கை 20 க்கு 20 அணியின் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். பல்லேகலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உலகக் கிண்ண போட்டித் தொடருக்கு தயாரென கூறமுடியாது என்றும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்தப் போட்டியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிரன் பொலார்டுக்கு 500வது 20க்கு 20 போட்டியாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.