7 ஆவது இருபதுக்கு – 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி..!!
2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் மகளிர்க்கான 7 ஆவது இருபதுக்கு – 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற குறித்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் முதலிடங்களை இடத்தை பெற்ற தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் தடவையாகும்.