இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது 20க்கு 20கிரிக்கெட் போட்டி இன்று..!!!
இன்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மேலும் இந்த நிலையில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கும் இடையிலான 2ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்றிரவு 7 மணியளவில் தொடங்கவுள்ளது.