இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்கேற்கவுள்ள நிரோஷன் டிக்வெல்ல..!!!
இன்றைய தினம் கண்டி பல்லேகலை மைதானமத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணியில் முக்கிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் படி, செஹான் ஜயசூரியவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் நிரோஷன் டிக்வெல்ல பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.