வலை பயிற்சியின் போது தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து ரசிகர்களை மிரள வைத்த டோனி..!!!
எதிர்வரும் 19 ஆம் திகதி 13வது ஐ.பி.எல்.தொடர் தொடங்கவுள்ளது. அந்த தொடருக்கான பயிற்சிகளை கிரிக்கெட் வீரர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மகேந்திர சிங் தோனி இன்றுவரை இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. மேலும் இந்த நிலையில் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி தொடங்கவுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பங்கு பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னைக்கு வரத்தொடங்கியுள்ளனர். முக்கிய வீரர்களான தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சில வீரர்கள் சென்னைக்கு ஏற்கெனவே வந்து வலை பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
எனவே, சென்னை வீரர்களின் வலை பயிற்சியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களும் கடந்த ஒரு வாரமாக சேப்பாக்கத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அவர்கள் அனைவரும் தோனியை காண ஆவலாக இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் (06-03-2020) மாலையில் தோனி வலை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை பார்த்த ரசிகர்கள் தோனி, தோனி என்று ஆரவாரம் செய்தனர். மேலும் வலை பயிற்சியின் போது தொடர்ந்து 5 பந்துகளில் சிக்சர் அடித்து மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை மிரள வைத்தார். தோனி தொடர்ச்சியாக சிக்சர்கள் அடித்த விடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
BALL 1⃣ – SIX
BALL 2⃣ – SIX
BALL 3⃣ – SIX
BALL 4⃣ – SIX
BALL 5⃣ – SIXஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி!
முழு காணொளி காணுங்கள் ??
#⃣ "The Super Kings Show"
⏲️ 6 PM
? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
? மார்ச் 8
➡️ @ChennaiIPL pic.twitter.com/rIcyoGBfhE— Star Sports Tamil (@StarSportsTamil) March 6, 2020