இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று..!!
வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்ற முன்னாள் கிரிக்கட் வீரர்களின் 20க்கு 20 கிரிக்கட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றன. தமது முதல் ஓவரிலேயே விக்கெட்டுக்களை வீழ்த்தும் வல்லமை கொண்ட சமிந்த வாஸ், இன்றைய போட்டியிலும் தமது முதல் ஓவரிலேயே சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டினை வீழ்த்தினார். தனது முதலாவது பந்தில் விரேந்திர சேவாக் பிடியெடுப்பு ஒன்றை வழங்கிய போதே அதை மாவன் அத்தபத்து தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 7 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 28 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.