எதிர்வரும் 29 ஆம் திகதி பார்வையாளர்கள் இல்லாத போட்டிகளாக இடம்பெறவுள்ள ஐ.பி.எல்….!
எதிர்வரும் 29 ஆம் திகதி தொடங்கவிருந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டி பார்வையாளர்கள் இல்லாத போட்டிகளாக நடைபெறலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. உலக நாடுகளில்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக இந்திய தொடரின் போது தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர்கள் வேறு எவருடனும் கைலாகு செய்ய மாட்டார்கள் என அதன் பயிற்றுவிப்பாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்ற தொற்று கிருமிகள் கைலாகு செய்வதனால் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கைலாகு செய்யாமல்; இருப்பது சிறந்தது என்றால், அதை நாங்கள் செய்வோம் என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் அதை பின்பற்றுவதுடன் முன்னெச்சரிக்கையாகவும் இருப்பார்கள் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்றுவிப்பாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போட்டியாக நடாத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
அதே நேரத்தில், இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களும் ஏனையவர்களுடன் கைலாகு செய்ய மாட்டார்கள் என முன்னர் கூறியிருந்தனர். அத்துடன் இந்த போட்டிகளின் போது பார்வையாளர்களுடன் சுயபடம் எடுத்தல் மற்றும் நினைவு ஒப்பம் இடுதல் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் சபை தமது அணி வீரர்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.