பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி..!!
பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் தொடரில் கராச்சி கிங் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற கராச்சி கிங் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கு அமைய முதலில் துடுப்பொடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. அதன் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.