தென்னாபிரிக்கா அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிப்பு..!!
தென்னாபிரிக்கா அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் 60 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. அதில் அனைத்து வகையான உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் உள்ளடங்குவதாக தென்னாபிரிக்க கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக காற்பந்து மற்றும் ரகர் உள்ளிட்ட மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.