2020 டி-20 உலகக் கிண்ணம் நடக்குமா? அல்லது நடக்காதா? ஐசிசி முக்கிய தகவல்
கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் அனைத்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்த சர்வதே கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.
கிரிக்கெட் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நாடுகளில் உள்ளுர் கிரிக்கெட் போட்டி தொடரை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடர் குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில், ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரின் உள்ளுர் ஒருங்கிணைப்புக் குழு நிலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
2020 அக்டோபர் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் 8 மைதானங்களில் டி-20 உலகக் கோப்பை தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட படி தொரை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தகவலை உலகெங்கிலும் உள்ள டி-20 கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.