இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி னிமையில் இருக்க விரும்புபவர் அல்ல!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திரசிங் டோனி கேப்டனாக இருக்கும் போது அறைக்கு எந்நேரத்திலும் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்ததாக முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற நெஹ்ரா நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் தெரிவிக்கையில், டோனி தனிமையில் இருக்க விரும்புபவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை.
டோனி கேப்டனாக பதவி வகித்த காலத்தில் போட்டி முடித்த பிறகு, இரவு நேரத்திலும் கேப்டன் அறை திறந்தே இருக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம், உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதுடன் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம் என நெஹ்ரா தெரிவித்துள்ளார்.