இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி தனது புதிய லுக் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி தனது புதிய லுக் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கு பின்னர் டோனி எந்தவொரு போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக டோனி ராஞ்சியிலுள்ள தனது பண்ணை வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் டோனி, மகளுடன் இணைந்து நாய்க்கு பந்து விளையாட கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியானது. அதில், டோனியின் முகம் சரியாக தெரியவில்லை. மீண்டும் டோனியின் மகள் பெயரில் உள்ள இன்ஸாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், டோனி தாடியுடன் ஆளே மாறிப்போய் உள்ளார்.
இதை கண்ட ரசிகர், அவரது புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.
#Dhoni Quarantine Look ?pic.twitter.com/72bR3T7TPy
— unis (@Unis100) May 8, 2020