சிம்பாப்வே மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிய ஐ.சி.சி…!!!
சிம்பாப்வே மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகள் மீது விதிக்கப்பட்ட தடையினை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை நீக்கியுள்ளது.
மேலும் இந்த சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஜூன் 22 ஆம் திகதி சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் ஐ.சி.சி. கலைத்துள்ளது. அதையடுத்து கிரிக்கெட் சிம்பாப்வே கிரிக்கெட்டை நிர்வகிக்க இடைக்கால நிர்வாக குழுவை சிம்பாப்வே அரசு அமைத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக விவாதித்த ஐ.சி.சி. விதிகளை மீறி குற்றத்திற்கு சிம்பாப்வே அணிக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்ததுள்ளது. இந்த காரணத்திற்காக 2016 இல் நேபாள அணிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி., தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி., விதிகள் மற்றும் நிபந்தனை இன்றி ஏற்றுக் கொண்ட சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் நிரந்தர உறுப்பினராக ஏற்கப்பட்டது.
இது போன்று நேபாள கிரிக்கெட் சங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, இதன் மீதான தடையும் விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.